fåQH mg;Jy; uFkhd;

 

 

எனக்கொரு
சந்தேகம

உன்னை
எங்கள் மூச்சு
என்றார

அப்படியென்றால்
நாம் செத்துப்போனது
எப்படி?

உன்னை
வாங்கிய நாம்
பிறகு
விட்டு விட்டோமா?

மேல்வாய்
பிரசவித்த
மெல்லிய ஒலி
வளர்ந்து
பருவமுற்றபோது
பைந்தமிழே
நீ பிறந்தாய

முப்பதே
ஒலிகளுக்குள்
முழு உலகம்
அளப்பவளே
உன்னைப்போல்
எப்போதும்
உயிர் மெய்யோடு
இயங்குகின்ற மொழி எது?

குறிஞ்சியிலே
வாழைக்குமரியாய்
உதித்தவள

முல்லையிலே
மலர்ந்து
முழுமலராய்
சிரித்தவள

மருதத்தில்
போகத்தால்
மசக்கை
கொண்டவள


நெய்தலிலே
காவியங்கள்
நெய்தவள

ஈரமற்ற
பாறையிலும்
பூத்த மணிமலர

பாடயிலே
தேவர்களின்
பாடைகள்
போனபின்னும

உன் செய்
பாடயிலே
ஆடயிலே
படிப்படியாய்
வளர்ந்தவள

வாயின்
சுவாசமே
வயிறார
தித்திக்கும்
கனிச்சுவைய

எங்கள்
காதருந்தும்
கள்ள

எம்மொழி
செம்மொழி
எனக்கேட்டால

தலைநிமிர்ந்து
எம்மொழி
செம்மொழி
எனச்சொல்லும்
புகழ் கொடுத்தாய

செத்த மொழிகள்
இங்கு
சிம்மாசனம் ஏற
உயிர் மெய்யோடு
இருந்த உயர்ந்த
மொழி
தமிழ்மொழிக்கோ
தாமதமாகவே
செம்மொழி
சிம்மாசனம் கிடைத்தத

இதற்கு
தமிழன்
தூங்கி
கிடந்ததுதான்
காரணம

தான்
ஆடாவிட்டாலும்
பரவாயில்லை
தமிழ்
ஆடவேண்டும்
என்று
நினைக்கும்
கலைஞர்
இல்லையென்றால்
இதுகூட
நடந்திருக்காத

தமிழே
நீ
தீயாலே
கொஞ்சம்
தீந்தாய

கடல்
என்னும்
பேயாலே
பேரழிவை
பெற்றாய

கரையானின்
வாயாலே
கொஞ்சம்
கரைந்தாய

வத்தவந்த
அயல்மொழியின்
நோயாலே
நலம்
கெட்டு
நொந்தாய

இன்றோ
உன்
சேயாலே
சீரழிந்து
தேம்பி
அழுகின்றாய


தமிழே
உன்னிடத்தில்
உயிரெழுத்தை
கற்றோமே
உயிர் பெற்று எழுந்தோம

மெய்யழுத்தை
கற்றோமே
மெய்யெழுத கற்றோம

நீ
ஆயுதமும்
உயிர் என்றாய

அதை மறந்து
போனதனால்
பகைவர்களிடம்
தோற்றுவிட்டோம

பத்துப்பாட்டு
என்றால்
பதறுகிறோம்
திரைப்படத்தில்
குத்துப்பாட்டு
என்றால்
குதூகலமாய்
ஆடுகிறோம

எட்டுத்தொகை
பெற்று
இறுமாந்து
இருந்த
இனம்
சுற்றித்
தொகைக்கு
எல்லாம்
தொலைத்து
விட்டு
இருக்கின்றோம

அன்றோ
குரல் என்ற
உன்
ஈரடியை
வணங்கியது
உலகம

இன்றோ
யார் என்ற
விவஸ்தை கூட
இல்லாமல்
இனப்பகைவர்
காலடியில்
விழுவதுதான்
தமிழரின்
கலாச்சாரம்
உன்
சிலம்பம்
அதிகாரம்
செய்தது
அன்ற

இன்றோ
அதிகாரக்கால்களில்
சிலம்பாகி
கிடக்கிறான்
தமிழன

பரன்குணம்
படைத்த
பரம்பர

இன்று உன்னை
பரணிலே
போட்டுவிட்டு
பாதையெல்லாம்
நடக்கிறத

பிள்ளைத்தமிழ்
பேச பேரின்பம்
கொண்டவளே
இன்று
உன்
பிள்ளைகள்
பேசும் பேச்சிலே
நீ இல்ல

இமயத்தில்
கொடியேற்றி
இறுமாந்து
நின்றவன

சமயக்கொடியேற்றி
சகதியிலே
விழுந்துவிட்டான

புலிக்கொடியை
பறக்கவிட்டு புகழோடு
வாழ்ந்தவன்தான

புலியென்று
சொன்னாலே
புலியமரம்
ஏறுகின்றான

மூதறிஞர்
தந்த
முப்பால்
இருக்

நாற்பால்
என்ற நச்சுப்பால்
குடிக்கின்றான

நெற்கொடியை
பறக்கவிட்ட
வீரன்தான

இந்த
வில்லுப்பாட்டு
பாடி
வீணர்களை
புகழுகின்றான

கங்கைகொண்டவன்தான்
இன்று
காவிரியையும்
இழந்துவிட்டு
கையை
பிசைந்து
நிற்கிறான

முப்படையால்
நான்கு
திசைகளையும்
வென்றவன

சாதி
சமயம்
கட்சி
என்ற
முப்படையால்
தோற்று
முகவரியை
இழந்துவிட்டான

தாய்ப்பாலுக்கு
அப்பால்
உன்
தனப்பாலை
குடித்ததொரு
ஒரு
வாய்ப்பால்
வளர்ந்தவன்
மகன

வஞ்சகப்
போதையின்
நோய்ப்பால்
அருந்தி
நூதனமாய்
சாகின்றான

உன்னை
மொழிகளுக்கெல்லாம்
முதன் மொழி என்றாய்


அதனால்
உன்னை முதலாக
போட்டு வியாபாரம்
தொடங்கிவிட்டான

தமிழன்
சீழ்பிடித்த
கொப்புளங்களை
எல்லாம்
தாயின்
மார்பகங்களாய்
நினைக்கிறான

அன்று நீ
சங்கப்பலகை என்னும்
அரியாசனத்தில் அழகியாய்
வீற்றிருந்தாய

இன்றோ
எங்கள்
கடைப்பலகையில் கூட
நீ கால்வைக்க
இடமில்ல

கோயிலுக்குள்ளே
நீ குடியேற
முடியவில்ல

வாயிலுக்கு
வெளியே
உன்னை
வைத்துவிட்டு
செல்கின்றார்
செருப்பை போ

வழக்காடு
மன்றத்தில்
குற்றவாளிகளுக்கு
கூட
கூண்டுகள்
உண்ட

நீ
நுழையமட்டும்
அனுமதியில்ல


அம்மா தாயே
என்னும்
பிச்சைகாரர்
வாயில்
மட்டும்தான்
நீ இருக்கின்றாய

தெருவெங்கும்
தமிழ் முழக்கம்
செழிக்கச்செய்வோம்
என்ற பாரதிய

உன் கனவை
நாங்கள்
நிறைவேற்றி
வைத்துவிட்டோம

வந்து பார்
இப்போது
தமிழ்
தெருவில்தான்
நிற்கிறத

தமிழனுக்கு
தேசிய
கீதமே
தாலாட்டுதான

மதம்
சாதி
திரைப்படம்
என்று
இவனுக்குதான்
எத்தனை
படுக்கைகள

தமிழன்
ஒன்று
கும்பகர்ணனாக
இருக்கிறான்
இல்லையென்றால்
வீடணாக
இருக்கிறான

இளைஞனிடம்
விழிப்புணர்ச்சி
வேண்டுமென்றால

நாங்கள்தான்
பெண்களை
கண்டால்
விழி புணர்ச்சி
செய்கிறோமே
என்கிறான

தமிழன்
விழித்திருக்கும்
போது கூட
திரைப்பட அரங்குகள்
என்ற இருட்டறையிலேயே
இருக்கின்றான

இவனுக்கு
பெரியதிரை
பெரிய வீடு
சின்னத்திரை
சின்ன வீட

இந்த வீடுபேற்றிற்காக
இவன்
அறத்தையும்
இழந்துவிட்டான்
பொருளையும்
இழந்துவிட்டான

அகமிழந்தான்
பொருளிழந்தான்
ஆன்மாவை
விற்றுவிட்டான்
முகமிழந்தான

தன்னுடைய
முகவரியையும்
இழந்துவிட்டான

எனக்கு
வீடெங்கே
வினையெங்க

எனக்கேட்டு நின்ற
ஏடெங்கே
எழுத்தெங்க

இன உணர்வு

பெற்றிருந்த நாடெங்கே
வீடெங்க

உன் புதல்வர்
கண்டிறிந்த
சூடெங்கே
சொரணை எங்கே
சொப்பனமாய் போனத

இந்த
நாட்டில்
நடிப்பவர்கள்தான்
தலைவர்களாகிறார்கள்
அல்லது
தலைவர்களாக
இருப்பவர்கள்
நடிக்கிறார்கள

தமிழா
விழித்துக்கொள
இல்லையென்றால்
வெள்ளித்திரைக்கென்று
உன் வேட்டியை
உருவி கொண்டு
சென்றுவிடுவார்கள்...

 

Poems.
© 2000 - 2009 Tamilpower.com.All rights reserved.

பால்வீதி

தீக்குளியள்
————-
ஒருவர் நினைவை
ஒருவர் கொளுத்திக்கொண்டு
இருவரும் எரிவோம்
மெதுவாக
நான் மெழுகுத்திரியாக
நீ ஊதுவத்தியா

வேதனையை நான்
வெளிச்சப்படுத்துகிறேன்
நீ மணம் ஊட்ட

அணைத்தும் என்னை
மறந்துவிடும் வேதனைக்கு
உன் ஞாபகம்
சுற்றிக்கொண்டிருக்கும
 

 

சத்திர வாசம்
————–
அர்த்தங்களின் சந்தையில் நாம்
முகவரிகளைத் தொலைத்துக் கொண்டோம

திறந்திருந்ததொரு
வார்த்தையுள் நுழைந்து
தாழிட்டுக் கொண்டேன்
விளக்கையும் அணைத்துவிட்ட

மற்றொரு வார்த்தையின் கதவை
நீ தட்டுகிறாய்
என்னைக் கூவ

 

கதவு
—–

பித்தன்
கதவை
மூடிக்கொண்டும்
திறந்துகொண்டும்
இருந்தான்

ஏன் இப்படிச்
செய்கிறாய்?
என்று கேட்டேன

கதவு
திறப்பதற்கா?
மூடுவதற்கா? என்று
அவன் கேட்டான்
அவன் மேலும் சொன்னான்

கதவுகள்
சில நேரம்
இமைகளாகத்
தெரிகின்றன

சில நேரம்
பூ விதழ்களாக
மலர்கின்றன
சில நேரம்
உதடுகளாகின்றன

பயணம் முடிந்து
வீடு திரும்புகிறவனுக்கும்
சிறையில் கிடப்பவனுக்கும்

கதவு திறப்பது என்பது
ஒரே அர்த்தம் உடையதல்ல

கதவுகளுக்கும்
சிறகுகளுக்கும்
ஏதோ இனம் புரியாத
சம்பந்தம் இருக்கிறது

கதவின்
திறப்பிலும்
மூடலிலும்
கேள்வியும் பதிலும்
இருக்கிறது

கதவுகளில்
சந்திப்பும் இருக்கிறது
பிரிவும் இருக்கிறது

நாம்
உள்ளே இருக்கிறோமா?
வெளியே இருக்கிறோமா?
என்பதைக்
கதவுகளே தீர்மானிக்கின்றன

நாம்
கதவு எண்களில்
வசிக்கிறோம்

மூடிய கதவு
உள்ளே இருப்பவற்றின்
மதிப்பை
கூட்டுகிறது

நம்
வீட்டுக்கு மட்டுமல்ல
நமக்கும்
கதவுகள் உண்டு
நாம்
நமக்குள்ளேயே செல்லவும்
நம்மைவிட்டு வெளியேறவும்

ஜனனத்தில்
ஒருகதவு
திறக்கிறது
மரணத்தில்
ஒரு கதவு
திறக்கிறது

இரண்டிலும் நாம்
பிரவேசிக்கிறோமா
வெளியேறுகிறோமா

கதவுதட்டும்
ஓசை கேட்டால்
‘யார்' என்று
கேட்காதே
ஒரு வேளை அது
நீயாக இருக்கலாம்

 

அந்தப்புரங்களில்….

 

நினைவுகளில் சூலாகி
நினைவுகளில் புதைந்து
கணந்தோறும் - எனக்குப்
புதுப்புது அவதாரங்கள்

எண்ணங்களை சுவாசித்து
எண்ணங்களில் நான்றுகொண்டு
பொழுதுக்கும்
வாழ்வோடு கண்ணாமூச்சி

குப்பையைக் கிளராமல்
துயிலை அடைக்காகவே
அமரும் இமைகள்

நரம்புகளின் காம அழைப்பை
அலட்சியம் செய்து
நெருப்புக் காய்களால்
சதுரங்கமாடும் விரல்கள்

ஒட்டடைக் கோலிலேயே
வலைபின்னும் சிலந்தி நான்
சிக்குகின்ற ஈயும் நான்

 

 

கொடுக்கல்
—————
கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?

நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும்
கொடுக்கப்பட்டதல்ல

உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக்
கொடுக்கப்படுகிறது

நீ ஒரு கருவியே

இசையைப்
புல்லாங்குழல்
கொடுப்பதில்லை

இசை வெளிப்படுவதற்கு
அது ஒரு கருவியே

இயற்கையைப் பார்
அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
கொடுப்பதில்லை

தேவையுள்ளவன்
அதிலிருந்து
வேண்டியதை
எடுத்துக்கொள்கிறான்

நீயும் இயற்கையின்
ஓர் அங்கம் என்பதை
மறந்துவிடாதே

கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே

உன் வார்த்தையும்
ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்

உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்

ஒரு பூவைப் போல்
சப்தமில்லாமல் கொடு

ஒரு விளக்கைப் போல
பேதமில்லாமல் கொடு

உன்னிடம் உள்ளது
நதியில் உள்ள நீர்போல்
இருக்கட்டும்

தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம்
சம்மதம் கேட்பதில்லை

கொடு
நீ சுத்தமாவாய்
கொடு
நீ சுகப்படுவாய்
கொடு
அது உன் இருத்தலை
நியாப்படுத்தும
 

 

உதிரும் சிறகுகள்

 

மழை ஓய்ந்த
முன்னிரவில்
சாளரத்தின் வழியே
அறையில் புகுந்து
மின் விளக்கை
மொய்த்து
முட்டி மோதி
சிறகுகள் உதிர்த்து விழும்
ஈசல் கூட்டம

காலையில்
திட்டியபடியே
செத்த உடல்களோடு
சிறகுகள் கூட்டிக்
குப்பையில் எறிந்து -

ஏதோ இருளை
மோகித்து
ஏதோ சாளர வழியே
நுழைந்து
சிறகுகள்
உதிர்க்கப் போவோம்
நாம்.

 

அப்துல் ரகுமான்


தொகுப்பு – சுட்டுவிரல

 

தொலைந்து போனவர்கள்

 

விடிந்ததென்பாய் நீ அனுதினமும் – வான்
வெளுப்பது உனது விடியலில்லை
முடிந்ததென்பாய் ஒரு காரியத்தை – இங்கு
முடிதல் என்பது எதற்குமில்ல

மணந்தேன் என்பாய் சடங்குகளும் – வெறும்
மாலை சூட்டலும் மணமில்லை
இணைந்தேன் என்பாய் உடற்பசியால் – உடல்
இரப்பதும் கொடுப்பதும் இணைப்பல்ல.

கற்றேன் என்பாய் கற்றாயா? – வெறும்
காகிதம் தின்பது கல்வியில்லை
பெற்றேன் என்பாய் எதைப்பெற்றாய்? – வெறும்
பிள்ளைகள் பெறுவது பெறுவதல்

குளித்தேன் என்பாய் யுகயுகமாய் – நீ
கொண்ட அழுக்கோ போகவில்லை
அளித்தேன் என்பாய் உண்மையிலே – நீ
அளித்த தெதுவும் உனதல்

உடை அணிந்தேன் எனச் சொல்லுகிறாய் – வெறும்
உடலுக் கணிவது உடையல்ல
விடையைக் கண்டேன் என்றுரைத்தாய் – ஒரு
வினாவாய் நீயே நிற்கின்றாய

தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் மனிதரெல்லாம் – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார

ஆட்டத்தில் உன்னை இழந்து விட்டாய் – உன்
அசலைச் சந்தையில் விற்றுவிட்டாய்
கூட்டத்தில் எங்கோ தொலைந்துவிட்டாய் – உனைக்
கூப்பிடும் குரலுக்கும் செவிடானாய

‘நான்’ என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய்
‘ஏன்’? என்பாய் இது கேள்வியில்லை – அந்த
ஏன் எனும் ஒளியில் உனைத் தேடு?

 

- அப்துல் ரகுமான்

(தொகுப்பு – சுட்டுவிரல்)

 

இரு பக்கங்கள்
————–
காலையின் ஒளியில்
கண்கள் திறக்கும்
கமலங்கள் ஒரு பக்கம்
மாலையின் இருளில்
சேலையை அவிழ்க்கும்
குமுதங்கள் ஒரு பக்கம்

தண்ணீர் தேடித்
தவிக்கும் வேர்களின்
தாகங்கள் ஒரு பக்கம்
புண்ணீர் நாறும்
பூமியில் பெய்யும்
மேகங்கள் ஒரு பக்கம்

விழிகள் அணைந்தவர்
சமாதியில் எரியும்
விளக்குகள் ஒரு பக்கம்
வழியினில் இருளில்
ஒளியினுக் கேங்கும்
விழிகள் ஒரு பக்கம்

கரிந்த சிறகுடன்
சுடரில் துடிக்கும்
விட்டில்கள் ஒரு பக்கம்
விரிந்த சிறகுடன்
கூண்டில் துடிக்கும்
பறவைகள் ஒரு பக்கம்

புத்தனுக் காகப்
பொன்னிழல் விரிக்கும்
போதிகள் ஒரு பக்கம்
சித்தன் ஏசுவின்
செம்புனல் குடிக்கும்
சிலுவைகள் ஒரு பக்கம்.

 

- அப்துல் ரகுமான்

 

(தொகுப்பு – சுட்டுவிரல்)